என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராதாபுரம் அருகே 2 கோவில்களில் பூட்டை உடைத்து கொள்ளை
Byமாலை மலர்12 March 2021 10:31 AM GMT (Updated: 12 March 2021 10:31 AM GMT)
ராதாபுரம் அருகே 2 கோவில்களில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் குறித்தும் ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
நெல்லை, மார்ச்.12-
ராதாபுரம் அருகே உள்ள சிஙகாரதோப்பு பகுதியில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று அதிகாலை பூட்டை உடைத்து உள்ளே சென்றவர்கள் 1 பவுன் எடையுள்ள தங்கதாலி மற்றும் தங்க பொட்டை கொள்ளை அடித்து சென்றனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகி சுடலைமுத்து ராதாபுரம் போலீசில் புகார் செய்தார்.
இதுபோல ராதாபுரம் அருகே உள்ள தெற்கு மேப்பிலான்குளம் கிராமத்தில் உள்ள முப்புடாதி அம்மன் கோவிலிலும் நேற்று அதிகாலை பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
இங்கு கொள்ளையர்கள் அம்மன் கழுத்தில் கிடந்த 3 கிராம் தங்கதாலி, பொட்டுக்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகி ஆறுமுகம் ராதாபுரம் போலீசில் புகார் செய்தார்.
இந்த 2 கொள்ளை சம்பவம் குறித்தும் ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X