என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பத்தூர் அருகே வீட்டில் பதுக்கிய 21½ கிலோ கஞ்சா பறிமுதல்
Byமாலை மலர்11 March 2021 4:46 PM GMT (Updated: 11 March 2021 4:46 PM GMT)
திருப்பத்தூர் அருகே போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 21½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வேலூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள பொம்மிகுப்பம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா கடத்தி வந்து பதுக்கி வைத்திருப்பதாக வேலூர் போதைப்பொருள் கடத்தல் தடுப்புபிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஏ.டி.ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் காலை பொம்மிகுப்பம் கிராமத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சீனிவாசன் (வயது 37) என்பவரது வீட்டில் மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 21½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர். ஆந்திர மாநிலம் அனக்கபள்ளி பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி பஸ்கள் மூலம் கடத்தி வந்து அவர் விற்பனைக்கு வீட்டில் பதுக்கி வைத்திருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X