என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொழிலாளி மீது வழக்கு பதியாமல் இருக்கரூ.1,700 லஞ்சம் வாங்கிய சப்- இன்ஸ்பெக்டர்கள் கைது
Byமாலை மலர்10 March 2021 12:21 AM GMT (Updated: 10 March 2021 12:21 AM GMT)
தொழிலாளி மீது வழக்கு பதியாமல் இருக்க ரூ.1,700 லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை:
தொழிலாளி மீது வழக்கு பதியாமல் இருக்க ரூ.1,700 லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவையை அடுத்த கோவைப்புதூரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 35). தொழிலாளி. இவர் கடந்த 27-ந் தேதி வேலைக்கு சென்றுவிட்டு காந்தி பார்க் வழியாக வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார். அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த வெறைட்டி ஹால் ரோடு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இருளப்பன் (56), ஸ்ரீதரை தடுத்து நிறுத்தினார்.
அப்போது ஸ்ரீதர் குடிபோதையில் இருந்ததால் மோட்டார் சைக்கிளை இருளப்பன் பறிமுதல் செய்தார். அதை, மறுநாள் வெறைட்டிஹால் ரோடு போலீஸ்நிலையத்துக்கு வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.
அதன்படி ஸ்ரீதர், தனது மோட்டார் சைக்கிளை வாங்குவதற்காக வெறைட்டிஹால் ரோடு போலீஸ்நிலையத்துக்கு சென்றார். அங்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் இருளப்பன், கணேசன் ஆகியோர் இருந்தனர்.
அவர்களிடம், ஸ்ரீதர் மோட்டார் சைக்கிளை கேட்டார். அதற்கு அவர் கள், உன் மீது வழக்கு போட்டால் கோர்ட்டுக்கு சென்று ரூ.10 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டும். மேலும் வழக்கு தொடர்பாக அடிக்கடி கோர்ட்டுக்கு அலைய வேண்டியது இருக்கும். எனவே வழக்கு போடாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.6 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு அவர், நான் கூலி வேலை தான் பார்க்கிறேன். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறி உள்ளார். உடனே அவர்கள், ரூ.3 ஆயிரம் கொடு என்று பேரம் பேசினர். அவர்களிடம், தன்னால் ரூ.1,700 தான் தர முடியும் என்றும், அந்த பணத்தை கொண்டு வருவதாக கூறி விட்டு ஸ்ரீதர் வெளியே சென்றார். இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத ஸ்ரீதர், நேற்று முன்தினம் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார், சப்- இன்ஸ்பெக்டர்கள் கணேசன், இருளப்பன் ஆகியோரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.
அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் ஸ்ரீதரிடம் ரசாயனம் தடவிய ரூ.1,700-ஐ கொடுத்து அனுப்பினர். பின்னர் அவர், நேற்று காலை வெறைட்டிஹால் ரோடு போலீஸ்நிலையத்துக்கு சென்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேசன், இருளப்பன் ஆகியோரிடம் ரூ.1,700 ரொக்க பணத்தை வழங்கினார்.
அதை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேசன், இருளப்பன் ஆகியோர் வாங்கிய போது, அங்கு மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையிலான போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
தொழிலாளியிடம் லஞ்சம் வாங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொழிலாளி மீது வழக்கு பதியாமல் இருக்க ரூ.1,700 லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவையை அடுத்த கோவைப்புதூரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 35). தொழிலாளி. இவர் கடந்த 27-ந் தேதி வேலைக்கு சென்றுவிட்டு காந்தி பார்க் வழியாக வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார். அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த வெறைட்டி ஹால் ரோடு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இருளப்பன் (56), ஸ்ரீதரை தடுத்து நிறுத்தினார்.
அப்போது ஸ்ரீதர் குடிபோதையில் இருந்ததால் மோட்டார் சைக்கிளை இருளப்பன் பறிமுதல் செய்தார். அதை, மறுநாள் வெறைட்டிஹால் ரோடு போலீஸ்நிலையத்துக்கு வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.
அதன்படி ஸ்ரீதர், தனது மோட்டார் சைக்கிளை வாங்குவதற்காக வெறைட்டிஹால் ரோடு போலீஸ்நிலையத்துக்கு சென்றார். அங்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் இருளப்பன், கணேசன் ஆகியோர் இருந்தனர்.
அவர்களிடம், ஸ்ரீதர் மோட்டார் சைக்கிளை கேட்டார். அதற்கு அவர் கள், உன் மீது வழக்கு போட்டால் கோர்ட்டுக்கு சென்று ரூ.10 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டும். மேலும் வழக்கு தொடர்பாக அடிக்கடி கோர்ட்டுக்கு அலைய வேண்டியது இருக்கும். எனவே வழக்கு போடாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.6 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு அவர், நான் கூலி வேலை தான் பார்க்கிறேன். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறி உள்ளார். உடனே அவர்கள், ரூ.3 ஆயிரம் கொடு என்று பேரம் பேசினர். அவர்களிடம், தன்னால் ரூ.1,700 தான் தர முடியும் என்றும், அந்த பணத்தை கொண்டு வருவதாக கூறி விட்டு ஸ்ரீதர் வெளியே சென்றார். இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத ஸ்ரீதர், நேற்று முன்தினம் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார், சப்- இன்ஸ்பெக்டர்கள் கணேசன், இருளப்பன் ஆகியோரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.
அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் ஸ்ரீதரிடம் ரசாயனம் தடவிய ரூ.1,700-ஐ கொடுத்து அனுப்பினர். பின்னர் அவர், நேற்று காலை வெறைட்டிஹால் ரோடு போலீஸ்நிலையத்துக்கு சென்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேசன், இருளப்பன் ஆகியோரிடம் ரூ.1,700 ரொக்க பணத்தை வழங்கினார்.
அதை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேசன், இருளப்பன் ஆகியோர் வாங்கிய போது, அங்கு மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையிலான போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
தொழிலாளியிடம் லஞ்சம் வாங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X