என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாளை அருகே கடை பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் கொள்ளை
Byமாலை மலர்9 March 2021 10:15 AM GMT (Updated: 9 March 2021 10:15 AM GMT)
பாளை அருகே கடை பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பாளை சமாதானபுரம் சங்கர் காலனியை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது46). இவர் சிவந்திப்பட்டி மலையடிவார பகுதியில் தார் விற்பனை நிலையம் வைத்துள்ளார்.
நேற்று அவர் கடைக்கு சென்ற போது, கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது மேஜையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் கடையில் இருந்த விலை உயர்ந்த இரும்பு பொருட்கள் ஆகியவையும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும். இதுகுறித்து செல்லத்துரை சிவந்திப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகைகளையும் பதிவு செய்துள்ளனர். தப்பி ஓடிய கொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X