என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்7 March 2021 7:15 PM GMT (Updated: 7 March 2021 7:15 PM GMT)
வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
சாயர்புரம்:
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள புதுநயினார்புரத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் பிரபு (வயது 25). இவர் சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பிரபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து விட்டார். ஆனால் இங்கு அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் வேலை இல்லாத காரணத்தால் பிரபு மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த பிரபு நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து சாயர்புரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பிரபுவின் தாயார் சரஸ்வதி சாயர்புரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மேரிஜெமித்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சாயர்புரம் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள புதுநயினார்புரத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் பிரபு (வயது 25). இவர் சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பிரபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து விட்டார். ஆனால் இங்கு அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் வேலை இல்லாத காரணத்தால் பிரபு மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த பிரபு நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து சாயர்புரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பிரபுவின் தாயார் சரஸ்வதி சாயர்புரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மேரிஜெமித்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சாயர்புரம் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X