search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    தமிழகம் வருவோருக்கு இ- பாஸ் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு

    புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தால் இ- பாஸ் கட்டாயம் தேவை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, 

    தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று 562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இந்தநிலையில் புதுச்சேரி, கர்நாடகா ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தால் இ- பாஸ் கட்டாயம் தேவை. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு இபாஸ் கட்டாயம் தேவை. வணிகரீதியான பயணமாக தமிழகத்தில் 3 நாட்கள் வரை தங்குவோருக்கு தனிமைப்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×