search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை உயர் நீதிமன்றம்
    X
    சென்னை உயர் நீதிமன்றம்

    உயர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்- வழக்கறிஞர் சங்கம் அறிவிப்பு

    வழக்கறிஞர்கள் அறைகள் மூடப்பட வேண்டும் என்று பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால், சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக் கிளையில் மத்திய - மாநில அரசு வழக்கறிஞர்கள் நேரடியாகவும், மற்ற வழக்கறிஞர்கள் காணொளி மூலமாகவும் மட்டும் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

    மார்ச் 8-ம் தேதி முதல், மத்திய - மாநில அரசு வழக்கறிஞர்கள் தவிர வேறு எவருக்கும் அனுமதியில்லை எனவும், வழக்கறிஞர் அறைகள் மூடப்படும் எனவும் தலைமைப் பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    வழக்கறிஞர்கள் அறைகள் மூடப்பட வேண்டும் என்று பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், மார்ச் 8-ம் தேதி நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட இருப்பதாக சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    வழக்கறிஞர்களின் அறைகளை மீண்டும் மூடுவதால் நீதிமன்றப் பணிகளும் வெகுவாக பாதிப்படையும், வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிவிடும் என வழக்கறிஞர் சங்கம் கூறி உள்ளது. 
    Next Story
    ×