என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எட்டயபுரம் அருகே மாமனார்-மாமியார் மீது தாக்குதல்- தொழிலாளி கைது
Byமாலை மலர்5 March 2021 10:06 PM GMT (Updated: 5 March 2021 10:06 PM GMT)
எட்டயபுரம் அருகே அரிவாள்மனையால் மாமனார் மற்றும் மாமியாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மருமகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள மாசார்பட்டி மேற்கு கோடாங்கி பட்டியை சேர்ந்த சந்திரசேகர் மகன் மணிகண்டன் (வயது 28). கூலித்தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வருகிறது. இவர் தினமும் மது குடித்துவிட்டு, மனைவி சுப்புலட்சுமியிடம் தகராறு செய்துள்ளார்.
இதுகுறித்து சுப்புலட்சுமி தனது பெற்றோரான மதுரை மாவட்டம் மேலவெளிவீதியைச் சேர்ந்த பாண்டி (57) மற்றும் பஞ்சவர்ணம் (42) ஆகியோரிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து நேற்று முன்தினம் மணிகண்டனிடம் பேசுவதற்காக பாண்டியும், பஞ்சவர்ணமும் வந்துள்ளனர். அவர்கள் சமரசம் பேசிக் கொண்டிருந்தபோது, ஆத்திரமடைந்த மணிகண்டன் வீட்டில் இருந்த அரிவாள்மனையால் மாமனார் மற்றும் மாமியாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காயமடைந்த 2 பேரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மாசார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் ரோஸ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X