search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    தமிழகத்தில் அதிகரிக்கும் புதிய தொற்று... இன்று 543 பேருக்கு பாதிப்பு- 5 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,37,525 ஆக உயர்ந்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,53,992 ஆக அதிகரித்துள்ளது. 

    நேற்று 482 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அதைவிட சற்று அதிகரித்து 543 ஆக உயர்ந்தள்ளது. 25 மாவட்டங்களில் பாதிப்பு ஒற்றை இலக்க எண்ணிக்கையில் பதிவாகி உள்ளது. 33 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய பாதிப்பு எதுவும் இல்லை. 3 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

    தமிழகத்தில் இன்று 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,513 ஆக அதிகரித்துள்ளது. 

    தமிழகத்தில் இன்று மேலும் 562 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,37,525 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 3,954 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    சென்னையில் கடந்த சில வாரங்களாக புதிய தொற்று எண்ணிக்கை 200க்கும் குறைவாக இருந்தது. இன்று 225 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 2,36,485 ஆக உயர்ந்துள்ளது. 
    Next Story
    ×