என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குறைந்து வரும் சின்ன வெங்காயம் விலை- இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
Byமாலை மலர்5 March 2021 10:08 AM GMT (Updated: 5 March 2021 10:08 AM GMT)
மைசூரில் இருந்து சின்னவெங்காயம் வரத்து அதிகரிக்க தொடங்கியதையடுத்து சின்னவெங்காயம் விலை குறைந்து வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை குழந்தை ஏசு கோவில் அருகே தற்காலிக காமராஜர் மார்க்கெட் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நடந்து வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, பெரம்பலூர், அரியலூர், தேனி, சிவகங்கை, நிலக்கோட்டை, திருவையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
மேலும் இங்கிருந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டை, நீடாமங்கலம், திருவையாறு, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஏற்கனவே சின்ன வெங்காயம் விலையை தொடர்ந்து பெரிய வெங்காயத்தின் விலையும் அதிகரித்து வந்தது. தற்போது பெரிய மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது. தஞ்சை மார்க்கெட்டிற்கு 100 டன் வரை பெரிய வெங்காயம் வந்தது. ஆனால் தற்போது 40 முதல் 50 டன் அளவிற்கு வெங்காயம் வருகிறது.
இது தவிர சின்னவெங்காயம் விலையும் கடுமையாக உயர்ந்து வந்தது. அதாவது கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று கிலோ ரூ.60 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. கிலோவுக்கு ரூ.40 வரை விலை குறைந்து காணப்பட்டது.
இதே போல் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலையும் ரூ.10 விலை குறைந்து ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதமாக ஏறுமுகமாக இருந்த சின்ன மற்றும்பெரிய வெங்காயத்தின் விலைகள் தற்போது குறையத்தொடங்கி இருப்பது இல்லத்தரசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து வெங்காய மொத்த வியாபாாரிகள் கூறுகையில், வடமாநிலங்களில் பருவம் தவறி மழை பெய்ததால் பெரிய வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தஞ்சை மாவட்டத்திற்கு வெங்காயம் வரத்து பாதியாக குறைந்துள்ளது. தற்போது வெங்காயம் வரத்து அதிகரிக்க தொடங்கியதையடுத்தும், விற்பனை வெகுவாக இல்லாததாலும் விலை குறையத்தொடங்கி உள்ளது.
இதே போல் கர்நாடக மாநிலமான மைசூர் பகுதிகளில் சின்ன வெங்காயம் அறுவடை பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அங்கிருந்து விற்பனைக்கு அதிக அளவில் வருகிறது. இதனால் சின்ன வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது. இது மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றார்.
தஞ்சை குழந்தை ஏசு கோவில் அருகே தற்காலிக காமராஜர் மார்க்கெட் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நடந்து வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, பெரம்பலூர், அரியலூர், தேனி, சிவகங்கை, நிலக்கோட்டை, திருவையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
மேலும் இங்கிருந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டை, நீடாமங்கலம், திருவையாறு, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஏற்கனவே சின்ன வெங்காயம் விலையை தொடர்ந்து பெரிய வெங்காயத்தின் விலையும் அதிகரித்து வந்தது. தற்போது பெரிய மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது. தஞ்சை மார்க்கெட்டிற்கு 100 டன் வரை பெரிய வெங்காயம் வந்தது. ஆனால் தற்போது 40 முதல் 50 டன் அளவிற்கு வெங்காயம் வருகிறது.
இது தவிர சின்னவெங்காயம் விலையும் கடுமையாக உயர்ந்து வந்தது. அதாவது கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று கிலோ ரூ.60 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. கிலோவுக்கு ரூ.40 வரை விலை குறைந்து காணப்பட்டது.
இதே போல் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலையும் ரூ.10 விலை குறைந்து ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதமாக ஏறுமுகமாக இருந்த சின்ன மற்றும்பெரிய வெங்காயத்தின் விலைகள் தற்போது குறையத்தொடங்கி இருப்பது இல்லத்தரசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து வெங்காய மொத்த வியாபாாரிகள் கூறுகையில், வடமாநிலங்களில் பருவம் தவறி மழை பெய்ததால் பெரிய வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தஞ்சை மாவட்டத்திற்கு வெங்காயம் வரத்து பாதியாக குறைந்துள்ளது. தற்போது வெங்காயம் வரத்து அதிகரிக்க தொடங்கியதையடுத்தும், விற்பனை வெகுவாக இல்லாததாலும் விலை குறையத்தொடங்கி உள்ளது.
இதே போல் கர்நாடக மாநிலமான மைசூர் பகுதிகளில் சின்ன வெங்காயம் அறுவடை பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அங்கிருந்து விற்பனைக்கு அதிக அளவில் வருகிறது. இதனால் சின்ன வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது. இது மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X