என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜோலார்பேட்டை அருகே சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Byமாலை மலர்4 March 2021 3:27 PM GMT (Updated: 4 March 2021 3:27 PM GMT)
சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலைய நடைமேடை ஓரம் பதுக்கி வைத்திருந்த 70 மூட்டை ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடகத்துக்கு நேற்று அதிகாலை 4 மணியளவில் ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்பட இருப்பதாக நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் 2 மோட்டார் சைக்கிள்களில் அங்கு சென்றனர். அப்போது ரெயில் நிலைய நடைமேடை ஓரம் பதுக்கி வைத்திருந்த 3 டன் எடையிலான 70 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, ஒரு மினிவேனில் ஏற்றி நாட்டறம்பள்ளி தாசில்தார் அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர்.
அதிகாரிகளை பார்த்ததும் கடத்தல்காரர்கள் அங்கிருந்து வெளியேறி ரெயில் நிலையம் அருகில் வெளியே நிறுத்தப்பட்டு இருந்த அதிகாரிகள் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றனர். அதிகாரிகள் திரும்பி வந்து பார்த்தபோது, மோட்டார்சைக்கிள் சேதப்படுத்தப்பட்டு இருந்ததை மீட்டு பழுதுப்பார்க்க கொண்டு சென்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜோலார்பேட்டை அருகே சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடகத்துக்கு நேற்று அதிகாலை 4 மணியளவில் ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்பட இருப்பதாக நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் 2 மோட்டார் சைக்கிள்களில் அங்கு சென்றனர். அப்போது ரெயில் நிலைய நடைமேடை ஓரம் பதுக்கி வைத்திருந்த 3 டன் எடையிலான 70 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, ஒரு மினிவேனில் ஏற்றி நாட்டறம்பள்ளி தாசில்தார் அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர்.
அதிகாரிகளை பார்த்ததும் கடத்தல்காரர்கள் அங்கிருந்து வெளியேறி ரெயில் நிலையம் அருகில் வெளியே நிறுத்தப்பட்டு இருந்த அதிகாரிகள் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றனர். அதிகாரிகள் திரும்பி வந்து பார்த்தபோது, மோட்டார்சைக்கிள் சேதப்படுத்தப்பட்டு இருந்ததை மீட்டு பழுதுப்பார்க்க கொண்டு சென்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X