search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருத்துறைப்பூண்டி அருகே, மின்கம்பியில் உரசியதில் டிராக்டரில் ஏற்றி செல்லப்பட்ட வைக்கோல் தீயில் எரிந்து நாசம்

    திருத்துறைப்பூண்டி அருகே மின்கம்பியில் உரசியதில் டிராக்டரில் ஏற்றி செல்லப்பட்ட வைக்கோல் தீயில் எரிந்து நாசமானது.
    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் நெல் அறுவடை மற்றும் வைக்கோலை விற்பனைக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அறுவடை முடிந்த வயல்களில் இருந்து வைக்கோல் டிராக்டர்களில் ஏற்றி செல்லப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சிங்களாந்தி கிராமத்தில் நேற்று டிராக்டர் ஒன்று வயலில் இருந்து வைக்கோல் ஏற்றி சென்று கொண்டிருந்தது.

    சிங்களாந்தி கவரக்குளம் அருகே சென்றபோது டிராக்டரில் இருந்த வைக்கோல் அந்த வழியாக செல்லும் மின்கம்பி மீது உரசியது. இதனால் வைக்கோல் தீப்பிடித்துக்கொண்டது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக டிராக்டரில் இருந்து வைக்கோலை கீழே வீசினர். இதனால் டிராக்டரில் தீப்பிடிப்பது தவிர்க்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன், வைக்கோலில் பற்றிய தீயை அணைத்தனர். இதில் பெருமளவு வைக்கோல் தீயில் எரிந்து நாசமானது.

    திருத்துறைப்பூண்டி பகுதியில் வயல்கள் உள்ள பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் உயரே ெசல்லும் வகையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×