search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காவிரி-சரபங்கா நீரேற்று திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்தது

    நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டியில் காவிரி- சரபங்கா நீரேற்று திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    நீடாமங்கலம்:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் டெல்டா மாவட்டத்தையும் விவசாயிகளையும் பாதிக்கும் காவிரி-சரபங்கா நீரேற்று திட்டத்தை கைவிட வலியுறுத்தி நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகம் அருகே விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், நகர செயலாளர் ஜோசப், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காவிரி- சரபங்கா நீரேற்று திட்டத்தை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    இதில் நகர செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சாமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரகுராமன், ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ் ஆகியோர் முன்னிலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினர்கள் பாண்டியன், பிரகாஷ், நகர குழு உறுப்பினர் சுப்பிரமணியன், விவசாய சங்கத்தின் நகர தலைவர் பன்னீர்செல்வம், துணைத் தலைவர் தமிழ்மணி, நகர குழு உறுப்பினர் ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×