search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்த போது எடுத்த படம்.
    X
    மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்த போது எடுத்த படம்.

    திருப்பூர் தெற்கு தொகுதிஎம்.எல்.ஏ. அலுவலகம் ‘சீல்’ வைப்பு

    திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி குணசேகரன் எம்.எல்.ஏ. அலுவலகத்தை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
    திருப்பூர்:

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன. இதைத்தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசியல் கட்சியினரின் நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள், விளம்பர பதாகைகள் போன்றவை அகற்றப்பட்டன. இதன் ஒரு பகுதியாக நேற்று திருப்பூர் பல்லடம் ரோட்டில் கலெக்டர் அலுவலகம் எதிரே திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி குணசேகரன் எம்.எல்.ஏ. அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை சட்டமன்ற அலுவலகத்தை திறக்கக்கூடாது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×