என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலத்தில் வெவ்வேறு இடங்களில் சம்பவம்: ஒருதலைக்காதலால் 2 வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்2 March 2021 2:56 PM GMT (Updated: 2 March 2021 2:56 PM GMT)
சேலத்தில் வெவ்வேறு இடங்களில் ஒருதலைக்காதலால் 2 வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
கன்னங்குறிச்சி:
சேலம் கோரிமேட்டை அடுத்த சின்னக்கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் மகன் விக்னேஷ் (வயது 20). தொழிலாளி.
இவர் ஒரு பெண்னை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் மனமுடைந்த விக்னேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோன்று சேலம் செட்டிச்சாவடி திருவேணி நகரைச் சேர்ந்தவர் அறிவழகன் (28). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சேலத்தில் வெவ்வேறு இடங்களில் ஒருதலைக்காதலால் 2 வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X