என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கிணத்துக்கடவு அருகே நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த கோழிக்கடை உரிமையாளர்
கோவை:
கோவை செட்டியக்கா பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40). இவரது மனைவி காளீஸ்வரி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
விஜயகுமார் 3 கறிக்கோழிக்கடை நடத்தி வருகிறார். இதுதவிர தண்ணீர் கேன் சப்ளையும் செய்து வருகிறார். இவர் தாமரைக்குளத்தை சேர்ந்த ஒருவரிடம் ரூ.20 ஆயிரம் கடன் வட்டிக்கு வாங்கியுள்ளார். ரூ.10 ஆயிரத்தை திருப்பி செலுத்திவிட்டார். மீதி பணத்தை செலுத்த காலம் கடத்தி வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆட்டோவில் தண்ணீர் கேன் சப்ளை செய்ய புறப்பட்டார். அப்போது கடன் கொடுத்தவர் ஆட்டோவை வழிமறித்து பணத்தை திருப்பி கேட்டார். அப்போது நாளை தருகிறேன் என்று விஜயகுமார் கூறினார். இதனை ஏற்றுக்கொள்ளாத கடன் கொடுத்தவர் தகாத வார்த்தைகளால் பேசி தள்ளிவிட்டதாக தெரிகிறது.
இதனால் அவமானம் அடைந்த விஜயகுமார் ஆட்டோவில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீ மளமளவென பற்றி எரிந்தது. அதில் அதிர்ச்சியடைந்த கடன் கொடுத்தவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் விஜயகுமார் மீது பற்றி எரிந்த தீயை அணைத்து அவரது மனைவிக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். அவர் விஜயகுமாரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றார்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைச்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு விஜயகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்