என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் பட்டதாரி பெண்ணுக்கு காதல் தொல்லை- வாலிபர் கைது
Byமாலை மலர்2 March 2021 9:48 AM GMT (Updated: 2 March 2021 9:48 AM GMT)
கோவையில் கடந்த ஒரு ஆண்டாக பட்டதாரி பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குனியமுத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வெள்ள மாவடியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 30). இவர் கடந்த சில வருடங்களாக கோவைப்புதூர் பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார்.
இவருக்கு கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு கோவைப்புதூர் பகுதியை சேர்ந்த 21 வயது பட்டதாரி இளம்பெண்ணை பஸ் நிறுத்தத்தில் வைத்து பார்த்தார். அந்த பெண் வெளியே செல்லும்போது பின் தொடர்ந்து செல்லும் கனகராஜ் காதல் தொல்லை கொடுத்து வந்தார். இதற்கு அந்த இளம்பெண் தொர்ந்து மறுத்து வந்தார்.
சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு சென்ற கனகராஜ் விசில் அடித்தும், சைகை மூலமாகவும் இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்து வந்தார். இந்த செயல் அந்த இளம்பெண்ணுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. இது குறித்து இளம்பெண் நடந்த சம்பவங்களை தனது பெற்றோரிடம் கூறி அழுது புலம்பினார்.
அவர்கள் இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணுக்கு ஒருவடமாக காதல் தொல்லை கொடுத்து வந்த கூலித் தொழிலாளி கனகராஜை கைது செய்தனர். பின்னர் அவர் மீது பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து வாலிபரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வெள்ள மாவடியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 30). இவர் கடந்த சில வருடங்களாக கோவைப்புதூர் பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார்.
இவருக்கு கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு கோவைப்புதூர் பகுதியை சேர்ந்த 21 வயது பட்டதாரி இளம்பெண்ணை பஸ் நிறுத்தத்தில் வைத்து பார்த்தார். அந்த பெண் வெளியே செல்லும்போது பின் தொடர்ந்து செல்லும் கனகராஜ் காதல் தொல்லை கொடுத்து வந்தார். இதற்கு அந்த இளம்பெண் தொர்ந்து மறுத்து வந்தார்.
சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு சென்ற கனகராஜ் விசில் அடித்தும், சைகை மூலமாகவும் இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்து வந்தார். இந்த செயல் அந்த இளம்பெண்ணுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. இது குறித்து இளம்பெண் நடந்த சம்பவங்களை தனது பெற்றோரிடம் கூறி அழுது புலம்பினார்.
அவர்கள் இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணுக்கு ஒருவடமாக காதல் தொல்லை கொடுத்து வந்த கூலித் தொழிலாளி கனகராஜை கைது செய்தனர். பின்னர் அவர் மீது பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து வாலிபரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X