என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெருமாநல்லூரில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்1 March 2021 10:25 PM GMT (Updated: 1 March 2021 10:25 PM GMT)
பெருமாநல்லூரில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெருமாநல்லூர்
பெருமாநல்லூர் போயர் காலனியை சேர்ந்தவர் மணிஸ்வரன் (வயது22). இவரது மனைவி ஹேமலதா (22). ஹேமலதா ஏற்கனவே செந்தில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் திருமணமாகி 3 வருடமான பின்னர் கணவன்-மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். இதையடுத்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிஸ்வரன் என்பவரை ஹேமலதா 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் மணிஸ்வரன் வேலைக்கு புறப்பட்ட போது தனக்கு வயிறு வலிப்பதாக ஹேமலதா கூறினார். பின்னர் வேலை முடிந்து மாலையில் மணிஸ்வரன் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் உள்ளே ஹேமலதா சேலையில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருமாநல்லூர் போலீசார் ஹேமலதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஹேமலதா தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்த ஹேமலதா 3 மாதமாக கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெருமாநல்லூர் போயர் காலனியை சேர்ந்தவர் மணிஸ்வரன் (வயது22). இவரது மனைவி ஹேமலதா (22). ஹேமலதா ஏற்கனவே செந்தில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் திருமணமாகி 3 வருடமான பின்னர் கணவன்-மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். இதையடுத்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிஸ்வரன் என்பவரை ஹேமலதா 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் மணிஸ்வரன் வேலைக்கு புறப்பட்ட போது தனக்கு வயிறு வலிப்பதாக ஹேமலதா கூறினார். பின்னர் வேலை முடிந்து மாலையில் மணிஸ்வரன் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் உள்ளே ஹேமலதா சேலையில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருமாநல்லூர் போலீசார் ஹேமலதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஹேமலதா தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்த ஹேமலதா 3 மாதமாக கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X