என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பிளஸ்-1 மாணவர் பலி
Byமாலை மலர்1 March 2021 3:42 PM GMT (Updated: 1 March 2021 3:42 PM GMT)
நத்தம் அருகே அரசு பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
செந்துறை:
நத்தம் அருகே உள்ள சிறுகுடி இந்திராநகரை சேர்ந்தவர் முருகேசன். பெயிண்டர். இவரது மகன் பிரதீப் (வயது 17). இவர் சிறுகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்தநிலையில் பிரதீப், தனது தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு நேற்று நத்தம் சென்றார். அதன்பிறகு நத்தத்தில் இருந்து சிறுகுடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். மெய்யம்பட்டி பிரிவு பகுதியில் அவர் வந்தபோது, பின்னால் சிங்கம்புணரியில் இருந்து நத்தம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக பிரதீப்பின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், பிரதீப்பை மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பிரதீப் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பிளஸ்-1 மாணவர் பலியான சம்பவம் சிறுகுடி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X