என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குலசேகரன்பட்டினத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு
Byமாலை மலர்1 March 2021 10:52 AM GMT (Updated: 1 March 2021 10:52 AM GMT)
குலசேகரன்பட்டினத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் பண்டகசாலை பகுதியை சேர்ந்த கிளைண்டன் மகன் ஸ்டெபின்(வயது22). இவர் அந்த பகுதியிலுள்ள மீனவர் ஒருவரின் உறவின பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே ஸ்டெபினை கண்டித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று வீட்டின் முன்பு மீனவரின் 15 வயது சிறுமி வாசலை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார். அங்கு வந்த வாலிபர் தான் காதலிக்கும் பெண்ணின் போன் நம்பர் வேண்டும், வாங்கி கொடு என கேட்டுள்ளார்.
இதற்கு மறுத்த சிறுமியை அவதூறாக பேசி, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அலறி துடித்த சிறுமியின் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அந்த பகுதி மக்கள் ஓடி வருவதை பார்த்த அவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்குப்பதிவு செய்து ஸ்டெபினை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X