search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாகன சோதனை
    X
    வாகன சோதனை

    பெரம்பலூர்-குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

    பெரம்பலூர்-குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய வாகன சோதனையிட சுழற்சி முறையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா 3 தேர்தல் பறக்கு படையினரும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தல் பறக்கும் படையில் ஒரு தாசில்தார், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு ஆண் போலீஸ், ஒரு பெண் போலீஸ் மற்றும் கார் டிரைவர் அடங்குவர். இவர்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை என சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×