என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை பரவை மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் மூட்டைகள் திருட்டு
Byமாலை மலர்1 March 2021 4:45 AM GMT (Updated: 1 March 2021 4:45 AM GMT)
மதுரை மார்க்கெட்டில் சின்னவெங்காய மூட்டைகள் திருட்டு போன சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 3 பேரை கைது செய்து, 5 மூட்டை சின்னவெங்காயத்தையும் பறிமுதல் செய்தனர்.
மதுரை:
கடந்த சில தினங்களாக சின்ன வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.150-க்கும் மேல் விற்பனையாகி வருகிறது.
இந்தநிலையில் மதுரை மார்க்கெட்டில் சின்னவெங்காய மூட்டைகள் திருட்டு போன சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதுபற்றி வருமாறு:-
மதுரை அன்பு நகர் அன்னை அபிராமி தெருவை சேர்ந்தவர் அக்பர் (வயது 43). இவர் பரவை காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இவரது கடையில் இருந்த 50 கிலோ எடை கொண்ட 5 மூட்டை சின்னவெங்காயத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக கூடல்புதூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில், வெங்காய மூட்டைகளை திருடிச் சென்றது தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார், மாசாணகுமார், இத்ரீஸ் என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து, 5 மூட்டை சின்னவெங்காயத்தையும் பறிமுதல் செய்தனர்.
கடந்த சில தினங்களாக சின்ன வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.150-க்கும் மேல் விற்பனையாகி வருகிறது.
இந்தநிலையில் மதுரை மார்க்கெட்டில் சின்னவெங்காய மூட்டைகள் திருட்டு போன சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதுபற்றி வருமாறு:-
மதுரை அன்பு நகர் அன்னை அபிராமி தெருவை சேர்ந்தவர் அக்பர் (வயது 43). இவர் பரவை காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இவரது கடையில் இருந்த 50 கிலோ எடை கொண்ட 5 மூட்டை சின்னவெங்காயத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக கூடல்புதூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில், வெங்காய மூட்டைகளை திருடிச் சென்றது தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார், மாசாணகுமார், இத்ரீஸ் என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து, 5 மூட்டை சின்னவெங்காயத்தையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X