search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    காரமடை அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது

    காரமடை அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    காரமடை:

    கோவை மாவட்டம் காரமடை அருகே கணுவாப்பாளையம் கட்டஞ்சி மலையடிவார பகுதியில் காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி போலீசார் சோதனை செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் நிற்காமல் வேகமாக சென்றனர். இதைத் தொடர்ந்து போலீசார் ஜீப்பில் விரட்டி சென்று அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். இதில், அவர்கள் 3 கிலோ கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரியவந்தது.

    தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஆனைக்கட்டி மொக்கசாலையை சேர்ந்த சுப்பிரமணி (வயது 28), கே.கே.நகரை சேர்ந்த மணிகண்டன் (20) இதையடுத்து சுப்பிரமணி, மணிகண்டன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×