என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்செந்தூரில் சங்கிலி திருடிய பெண் கைது
Byமாலை மலர்28 Feb 2021 5:12 PM GMT (Updated: 28 Feb 2021 5:12 PM GMT)
திருச்செந்தூரில் 2¾ பவுன் தங்க சங்கிலியை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
திருச்செந்தூர்:
சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருடைய மகன் பாலமுருகன் (வயது 36). இவர் சென்னையில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாசரேத் பகுதியில் தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். மாசி திருவிழா தேரோட்டம் பார்ப்பதற்கு தனது தாய் மற்றும் சித்தி ஆகியோருடன் பாலமுருகன் நேற்று முன்தினம் திருச்செந்தூர் வந்துள்ளார். அவரது சித்தியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அறுந்து விட்டதால் அதை பேப்பரில் மடித்து பாலமுருகன் தனது சட்டைப்பையில் வைத்துள்ளார்.
பின்னர் திருச்செந்தூரில் பஸ் ஏறும்போது பாலமுருகன் சட்டைப்பையில் இருந்த 2¾ பவுன் தங்க சங்கிலியை, கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியை சேர்ந்த மிக்கேல் என்பவரின் மனைவி கனி (எ) மல்லிகா (30) திருட முயற்சிக்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார்.
இதுகுறித்த பாலமுருகன் அளித்த புகாரின் பெயரில் திருச்செந்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் வழக்குப்பதிவு செய்து மல்லிகாவை கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X