search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலி
    X
    மின்சாரம் தாக்கி பலி

    வாலாஜா டோல்கேட்டில் மின்சாரம் தாக்கி காவலாளி பலி

    வாலாஜா டோல்கேட்டில் மின்சாரம் தாக்கி காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாைவ அடுத்த சென்னசமுத்திரம் மலைமேடு கிராமம் எம்.பி.டி. ரோட்டில் வசிப்பவர் முகமது இலியாஸ். இவரின் மகன் அப்துல் ரஹீம் (வயது 23). வாலாஜா டோல்கேட் பிளாசாவில் தனியார் நிறுவனத்தின் ஸ்டால் வைத்திருக்கும் இடத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவர், நேற்று அதிகாலை 5.15 மணியளவில் அப்பகுதியில் நடந்து வந்தபோது, அங்குள்ள ஒரு மின்கம்பத்தில் சுவிட்ச் பாக்ஸ் மீது அவரின் கை விரல் உரசியது. அதில் பாய்ந்திருந்த மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அப்துல்ரஹீம் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர். வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×