search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    முத்துப்பேட்டை அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

    முத்துப்பேட்டை அருகே முன்விரோத தகராறில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் கோவிலடி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி கீதா (வயது36). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் (48) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. 

    இந்தநிலையில் சம்பவத்தன்று துரைராஜ், கீதாவை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

    இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கீதா புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருக்குமரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைராஜை கைது செய்தனர்.
    Next Story
    ×