என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சரவணம்பட்டியில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்27 Feb 2021 10:55 AM GMT (Updated: 27 Feb 2021 10:55 AM GMT)
சரவணம்பட்டியில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காளப்பட்டி:
கோவை விளாங்குறிச்சி திருமுருகன் நகரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் அருண்குமார் (வயது38). குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அருண்குமார் சரவணம்பட்டி குமரகுரு காலேஜ் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடந்த ஜனவரி மாதம் கடையையும், வீட்டையும் பூட்டி விட்டு குடும்பத்துடன் சேலம் சென்றார். நேற்று இரவு சேலத்தில் இருந்து திரும்பிய அருண்குமாரின் தந்தை தங்கவேல் கோவை திரும்பினார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.
அதிர்ச்சியடைந்த அவர் வீட்டுக்குள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவை சோதனை செய்ததில் அதில் வைத்திருந்த 30 பவுன் நகை கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். குடியிருப்பு நிறைந்த பகுதியில் ஓட்டல் உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை விளாங்குறிச்சி திருமுருகன் நகரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் அருண்குமார் (வயது38). குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அருண்குமார் சரவணம்பட்டி குமரகுரு காலேஜ் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடந்த ஜனவரி மாதம் கடையையும், வீட்டையும் பூட்டி விட்டு குடும்பத்துடன் சேலம் சென்றார். நேற்று இரவு சேலத்தில் இருந்து திரும்பிய அருண்குமாரின் தந்தை தங்கவேல் கோவை திரும்பினார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.
அதிர்ச்சியடைந்த அவர் வீட்டுக்குள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவை சோதனை செய்ததில் அதில் வைத்திருந்த 30 பவுன் நகை கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். குடியிருப்பு நிறைந்த பகுதியில் ஓட்டல் உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X