search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    துடியலூர் அருகே விபத்து- மொபட்டில் சென்ற தனியார் நிறுவன பெண் ஊழியர் பலி

    துடியலூர் அருகே விபத்தில் தனியார் கம்பெனி பெண் ஊழியர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூர் அருகே உள்ள இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகள் கவுசல்யா (வயது 22). இவர் கோவை சிட்ரா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    தினமும் அவர் மொபட்டில் பணிக்கு சென்று வந்தார். நேற்று காலை முன்கூட்டியே வேலைக்கு செல்ல வேண்டியிருந்தது. இதனால் அதிகாலையே எழுந்து தனது மொபட்டில் பணிக்கு புறப்பட்டார்.

    கவுண்டர்மில்ஸ் பகுதியை அடுத்துள்ள சுப்பிரமணியபாளையம் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கவுசல்யா, லாரி சக்கரத்தில் சிக்கி பலியானார். தகவல் அறிந்த துடியலூர் போலீசார் விரைந்து சென்று பலியான கவுசல்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான குருமாணிக்கத்தை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தனியார் கம்பெனி பெண் ஊழியர் பலியான சம்பவம் துடியலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×