search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்- பழ.கருப்பையா
    X
    கமல்ஹாசன்- பழ.கருப்பையா

    மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா

    மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7-ந்தேதி வெளியாகும் என அதன் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்தில் அதன் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மக்கள் நீதி மய்யத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பழ. கருப்பையா இணைந்தார். சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பழ.கருப்பையா போட்டியிடுவார்

    சட்டப் பஞ்சாயத்து இயக்கம், மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும்.

    மார்ச் 1-ந்தேதி முதல் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும். பொன்ராஜ், ரங்கராஜ், செந்தில் ஆறுமுகம், சுரேஷ் அய்யர் ஆகியோர் நேர்காணலை நடத்துகின்றனர். முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7-ந்தேதி வெளியாகும். மார்ச் 3-ந்தேதி முதல் பிரசாரம் மேற்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×