search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்-சரத்குமார்
    X
    கமல்ஹாசன்-சரத்குமார்

    தமிழக சட்டசபை தேர்தல்- கமலுடன் சரத்குமார் சந்திப்பு

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் சந்தித்து பேசினார்.
    சென்னை:

    தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர்.

    இதனிடையே, அதிமுக கூட்டணியில் இருந்த சமத்துவ மக்கள் கட்சி அக்கூட்டணியில் இருந்து விலகி இந்திய ஜனநாயக கட்சியுடன் இணைந்துள்ளது.

    இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசனை சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் சந்தித்து பேசினார். சரத்குமாருடன் ஐஜேகே துணை பொதுச்செயலாளர் ரவிபாபு உடன் இருந்தார்.

    இச்சந்திப்பின் போது சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக சரத்குமாரும் கமல்ஹாசனும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Next Story
    ×