என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருங்கல் அருகே டிரைவர் மர்ம மரணம்- போலீசார் விசாரணை
Byமாலை மலர்27 Feb 2021 2:02 AM GMT (Updated: 27 Feb 2021 2:02 AM GMT)
கருங்கல் அருகே பொக்லைன் எந்திர டிரைவர் மர்மமான முறையில் இறந்து போனார். இது குறித்து அவரது தாயார் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருங்கல்:
கருங்கல் அருகே பெருமாங்குழி காரவிளையைச் சேர்ந்தவர் தேவபிரசாத் (வயது 36), பொக்லைன் எந்திர டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக ஆப்பிகோடு காட்டுமேல்விளையைச் சேர்ந்த சித்திரா என்பவருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை திடீரென இறந்து விட்டதாக சித்ரா, தேவபிரசாத்தின் தாயார் ஸ்ரீதேவிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதேவி, தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், கருங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேவபிரசாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருங்கல் அருகே பெருமாங்குழி காரவிளையைச் சேர்ந்தவர் தேவபிரசாத் (வயது 36), பொக்லைன் எந்திர டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக ஆப்பிகோடு காட்டுமேல்விளையைச் சேர்ந்த சித்திரா என்பவருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை திடீரென இறந்து விட்டதாக சித்ரா, தேவபிரசாத்தின் தாயார் ஸ்ரீதேவிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதேவி, தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், கருங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேவபிரசாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X