search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    கருங்கல் அருகே டிரைவர் மர்ம மரணம்- போலீசார் விசாரணை

    கருங்கல் அருகே பொக்லைன் எந்திர டிரைவர் மர்மமான முறையில் இறந்து போனார். இது குறித்து அவரது தாயார் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கருங்கல்:

    கருங்கல் அருகே பெருமாங்குழி காரவிளையைச் சேர்ந்தவர் தேவபிரசாத் (வயது 36), பொக்லைன் எந்திர டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக ஆப்பிகோடு காட்டுமேல்விளையைச் சேர்ந்த சித்திரா என்பவருடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை திடீரென இறந்து விட்டதாக சித்ரா, தேவபிரசாத்தின் தாயார் ஸ்ரீதேவிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

    இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதேவி, தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், கருங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேவபிரசாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×