என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமணம் ஆன 4 நாளில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்26 Feb 2021 8:39 PM GMT (Updated: 26 Feb 2021 8:39 PM GMT)
திருப்பூரில் திருமணம் ஆன 4 நாளில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அனுப்பர்பாளையம்:
புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் சிறுபூலுவப்பட்டியை அடுத்த கீதாநகர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் பஞ்சலிங்கம். இவருடைய மூத்த மகன் விக்னேஷ்குமார் (வயது 31). ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 22-ந்தேதி இவருக்கும் உடுமலையை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகள் வைஷ்ணவிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்திற்கு பின்பு விக்னேஷ்குமார் மனைவியுடன் சிறுபூலுவப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை நடைபயிற்சிக்கு சென்று வீட்டிற்கு திரும்பிய பஞ்சலிங்கம் அவருடைய மனைவியிடம் விக்னேஷ்குமார் எங்கே போனான் என்று கேட்டுள்ளார். அதற்கு அவருடைய மனைவி மகன் குளிக்க சென்று விட்டதாக கூறி உள்ளார்.
இதையடுத்து குளிக்க சென்ற பஞ்சலிங்கம் குளியலறை அருகே விக்னேஷ்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இறந்து போன விக்னேஷ்குமாரின் உடலை பார்த்து, அவருடைய மனைவியும், பெற்றோரும் கதறி அழுதனர்.
இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூரில் திருமணம் ஆன 4 நாளில் புது மாப்பிள்ளை துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் சிறுபூலுவப்பட்டியை அடுத்த கீதாநகர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் பஞ்சலிங்கம். இவருடைய மூத்த மகன் விக்னேஷ்குமார் (வயது 31). ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 22-ந்தேதி இவருக்கும் உடுமலையை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகள் வைஷ்ணவிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்திற்கு பின்பு விக்னேஷ்குமார் மனைவியுடன் சிறுபூலுவப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை நடைபயிற்சிக்கு சென்று வீட்டிற்கு திரும்பிய பஞ்சலிங்கம் அவருடைய மனைவியிடம் விக்னேஷ்குமார் எங்கே போனான் என்று கேட்டுள்ளார். அதற்கு அவருடைய மனைவி மகன் குளிக்க சென்று விட்டதாக கூறி உள்ளார்.
இதையடுத்து குளிக்க சென்ற பஞ்சலிங்கம் குளியலறை அருகே விக்னேஷ்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இறந்து போன விக்னேஷ்குமாரின் உடலை பார்த்து, அவருடைய மனைவியும், பெற்றோரும் கதறி அழுதனர்.
இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூரில் திருமணம் ஆன 4 நாளில் புது மாப்பிள்ளை துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X