என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆயக்குடி அருகே மொபட் மீது கார் மோதி தொழிலாளி பலி
Byமாலை மலர்26 Feb 2021 3:38 AM GMT (Updated: 26 Feb 2021 3:38 AM GMT)
ஆயக்குடி அருகே மொபட் மீது கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் நேற்று ஒட்டன்சத்திரத்தில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக தனது மொபட்டில் சென்றார். பின்னர் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனி நோக்கி வந்து கொண்டிருந்தார். ஆயக்குடி அருகே உள்ள மூகாம்பிகை கோவில் பகுதியில் வந்தபோது, கேரளாவில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த கார், சுப்பிரமணி சென்ற மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த ஆயக்குடி போலீசார் விரைந்து சென்று சுப்பிரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் நேற்று ஒட்டன்சத்திரத்தில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக தனது மொபட்டில் சென்றார். பின்னர் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனி நோக்கி வந்து கொண்டிருந்தார். ஆயக்குடி அருகே உள்ள மூகாம்பிகை கோவில் பகுதியில் வந்தபோது, கேரளாவில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த கார், சுப்பிரமணி சென்ற மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த ஆயக்குடி போலீசார் விரைந்து சென்று சுப்பிரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X