என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாசரேத்தில் ஓய்வுபெற்ற ஆடிட்டர் வீட்டில் ரூ.10 ஆயிரம் திருட்டு
Byமாலை மலர்25 Feb 2021 4:08 PM GMT (Updated: 25 Feb 2021 4:08 PM GMT)
நாசரேத்தில் ஓய்வுபெற்ற ஆடிட்டர் வீட்டில் ரூ.10 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாசரேத்:
நாசரேத் ஸ்டேப்ளி தெருவை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது 66). இவர் ஓய்வுபெற்ற ஆடிட்டர். இவரது மனைவி ரத்தினம் (60). இவர்கள் கடந்த 12-ந்தேதி தனது சகோதரரின் மகள் சடங்கு வைபவத்திற்காக ஓசூர் சென்றுள்ளனா். இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் இவரது வீட்டு கதவு திறந்து கிடந்தது.
பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து பார்க்கும்போது சங்கரலிங்கம் வரவில்லை. ஆனால் மர்ம நபர்கள் வீட்டின் முன்புற கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தொிய வந்தது.
இதுகுறித்து அவா்கள் நாசரேத் போலீசாருக்கும், சங்கரலிங்கத்திற்கும் தகவல் கொடுத்தனா். தகவலின்பேரில் சங்கரலிங்கம் ஓசூரில் இருந்து கிளம்பி நேற்று காலை நாசரேத் வந்தடைந்தார்.்
வீட்டினுள் சென்று பீரோவை பார்த்தார். பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து ் நாசரேத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனந்தமுத்துராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X