search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    ஜோலார்பேட்டை அருகே விளையாட்டு மைதானத்தில் இறந்து கிடந்த வாலிபர் அடையாளம் தெரிந்தது

    ஜோலார்பேட்டை அருகே விளையாட்டு மைதானத்தில் 25 வயது மதிக்கத்தக்க ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணையில் அவர் யார் என்பது அடையாளம் தெரிந்தது.







    ஜோலார்பேட்டை அருகே விளையாட்டு மைதானத்தில் 25 வயது மதிக்கத்தக்க ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் யார் என்பது குறித்த போலீசாரின் விசாரணையில் அடையாளம் தெரிந்தது.


    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவடி விளையாட்டு மைதானத்தில் 25 வயது மதிக்கத்தக்க ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு இருப்பதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்தீக் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தற்கொலை செய்து கொண்டவர் வாணியம்பாடியை அடுத்த கொத்தகோட்டை கோடியூர் பகுதியை சேர்ந்த சம்பத் என்பவரது மகன் பழனிவேல் (வயது 26) என்பதும், அவருக்கு திவ்யா என்ற மனைவியும், 1½ வயதில் ஆண் குழந்தை இருப்பதும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×