search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக சட்டசபை
    X
    தமிழக சட்டசபை

    சட்டசபையில் சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் மறைவுக்கு இரங்கல்

    தமிழக சட்டசபையில் சேலம் சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
    சென்னை:

    சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியதும் இரங்கல் தீர்மானங்களை சபாநாயகர் தனபால் பேரவையில் வாசித்தார். அப்போது சேலம் சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் மறைவு குறித்தும், விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக உயிரிழந்தவர்கள் குறித்தும், உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் உயிரிழந்தவர்கள் குறித்தும் அவையில் தெரிவித்தார்.

    இதில் மறைவுற்றவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலும், அனுதாபமும் தெரிவிப்பதுடன் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உறுப்பினர்கள் அனைவரும் 2 மணித்துளிகள் எழுந்து மவுனமாக நின்றனர்.
    Next Story
    ×