search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழ நெடுமாறன்
    X
    பழ நெடுமாறன்

    பழ.நெடுமாறன் கொரோனாவில் இருந்து மீண்டார்

    அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழ.நெடுமாறன் கொரோனாவில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினார்.
    சென்னை:

    தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கடந்த 11-ந்தேதி சளி, காய்ச்சல் அறிகுறியுடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் 2 வார கால சிகிச்சைக்கு பிறகு பழ.நெடுமாறன் நேற்று காலை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினார்.

    Next Story
    ×