புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் மலை மேல் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
விராலிமலை சுப்பிரமணிய சுவாமிகோவிலில் யாகசாலை பூஜை நடைபெற்றதை படத்தில் காணலாம்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் மலை மேல் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் வள்ளி- தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும் முருகன் அருணகிரிநாதருக்கு காட்சி தந்து அவருக்கு அஷ்டமாசித்தி வழங்கிய இடமாகவும் விளங்கி வருகிறது. இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய திருப்பணி குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகம் முடிவு செய்து கடந்த 2018-ம் ஆண்டு பாலாலயம் நடத்தப்பட்டது. மேலும் தற்போது புனரமைப்பு பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விக்னேஷ்வர பூஜையுடன் விழா தொடங்கியது.
கடந்த 22-ந்தேதி காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. பின்னர் விமான கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்று மாலை முதற்கால யாக பூஜையுடன் விழா தொடங்கியது. 23-ந்தேதி 2- ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜையும் தொடங்கி நடைபெற்றது. நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜை தொடங்கி பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) காலையில் 6-ம் கால யாக சாலை பூஜை நடக்கிறது.தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி கோவில் விமான கலசம், ராஜ கோபுர கலசத்திற்கும் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் சுப்பிரமணிய சுவாமி மூலவருக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.