என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி
Byமாலை மலர்24 Feb 2021 3:19 PM GMT (Updated: 24 Feb 2021 3:19 PM GMT)
திருப்பத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் தாலுகா பெரியகரம் கொல்லக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 32). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும், ஆந்திர மாநிலம் குப்பம் அருகே உள்ள சின்னபள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சாமுடி (37) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 10 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் லட்சுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற தாய் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று அந்தப்பகுதியில் உள்ள 30 அடி ஆழ கிணற்றில் கால்தவறி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி லட்சுமியை மீட்டபோது அவர் இறந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகி 3 வருடங்கள் ஆனதால், உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X