என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமநாதபுரம் அருகே வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை
Byமாலை மலர்24 Feb 2021 12:35 PM GMT (Updated: 24 Feb 2021 12:35 PM GMT)
ராமநாதபுரம் அருகே வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே பெரியபட்டினம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் என்பவரது மகன் சிராஜூதீன் (வயது 26). தென்னந்தோப்பு ஒன்றில் தேங்காய்களை ஏற்றிச்செல்லும் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தாராம். திருமணம் ஆகவில்லை. இவரது தாய், தந்தை இருவரும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை வழக்கம்போல வேலைக்கு கிளம்பி சென்றவர் கரிச்சான்குண்டு எதிரே கருவை காட்டுக்குள் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த திருப்புல்லாணி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திவாகர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X