என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூரில் பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது
Byமாலை மலர்24 Feb 2021 11:42 AM GMT (Updated: 24 Feb 2021 11:42 AM GMT)
திருவள்ளூரில் பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கூட்டமாக இருந்த நபர்கள் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சுசிபிரியன் (வயது 27), சேலத்தை சேர்ந்த மாணிக்கம் (24), திண்டிவனம் பழனி முருகன் (27), ஈரோடு உமா பரூக் (34), சென்னை வியாசர்பாடி வசந்தகுமார் (25), ஈரோடு பிரதீப் (35), அரக்கோணம் சாகுல் அமீது (42), திருவள்ளூர் வி.எம்.நகர் தினேஷ் (35), திருவள்ளூரை அடுத்த புங்கத்தூரை சேர்ந்த ஸ்ரீதர் (50), ஈரோடு கார்த்திகேயன் (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கார் ஒன்றையும், ரூ.81 ஆயிரம், 8 செல்போன்களையும் போலீசார் கைப்பற்றினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X