என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை மாவட்டத்தில் 449 துணை வாக்குச்சாவடிகள் அமைப்பு- கலெக்டர் விஷ்ணு தகவல்
Byமாலை மலர்24 Feb 2021 10:27 AM GMT (Updated: 24 Feb 2021 10:27 AM GMT)
நெல்லை மாவட்டத்தில் 449 துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் 1050-க்கு அதிகமான வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகளை பிரித்து துணை வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் 1050-க்கு அதிகமான வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகளை பிரித்து துணை வாக்குச்சாவடிகள் அமைக்குமாறு தெரிவித்து உள்ளது. அதன் அடிப்படையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளில் 449 வாக்குச்சாவடிகளில் 1050-க்கு அதிகமான வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
அதாவது, நெல்லை தொகுதியில் 308 வாக்குச்சாவடிகள் உள்ளது. தற்போது கூடுதலாக 100 துணை வாக்குச்சாவடிகளுடன் சேர்த்து 408 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதேபோல் அம்பை தொகுதியில் 294 வாக்குச்சாவடிகளும், 62 துணை வாக்குச்சாவடிகளும், பாளையங்கோட்டை தொகுதியில் 268 வாக்குச்சாவடிகளும், 121 துணை வாக்குச்சாவடிகளும், நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச்சாவடிகளும், 96 துணை வாக்குச்சாவடிகளும், ராதாபுரம் தொகுதியில் 306 வாக்குச்சாவடிகளும், 70 துணை வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 1,475 வாக்குச்சாவடிகளும், 449 துணை வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. துணை வாக்குச்சாவடிகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் அனைத்து சட்டமன்ற தொகுதியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனையின் பேரில் பிரிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், உதவி கலெக்டர்கள் சிவகிருஷ்ணமூர்த்தி, பிரதீக் தயாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சாந்தி, கணேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், தேர்தல் தாசில்தார் கந்தப்பன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டத்தில் 1050-க்கு அதிகமான வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகளை பிரித்து துணை வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் 1050-க்கு அதிகமான வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகளை பிரித்து துணை வாக்குச்சாவடிகள் அமைக்குமாறு தெரிவித்து உள்ளது. அதன் அடிப்படையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளில் 449 வாக்குச்சாவடிகளில் 1050-க்கு அதிகமான வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
அதாவது, நெல்லை தொகுதியில் 308 வாக்குச்சாவடிகள் உள்ளது. தற்போது கூடுதலாக 100 துணை வாக்குச்சாவடிகளுடன் சேர்த்து 408 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதேபோல் அம்பை தொகுதியில் 294 வாக்குச்சாவடிகளும், 62 துணை வாக்குச்சாவடிகளும், பாளையங்கோட்டை தொகுதியில் 268 வாக்குச்சாவடிகளும், 121 துணை வாக்குச்சாவடிகளும், நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச்சாவடிகளும், 96 துணை வாக்குச்சாவடிகளும், ராதாபுரம் தொகுதியில் 306 வாக்குச்சாவடிகளும், 70 துணை வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 1,475 வாக்குச்சாவடிகளும், 449 துணை வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. துணை வாக்குச்சாவடிகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் அனைத்து சட்டமன்ற தொகுதியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனையின் பேரில் பிரிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், உதவி கலெக்டர்கள் சிவகிருஷ்ணமூர்த்தி, பிரதீக் தயாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சாந்தி, கணேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், தேர்தல் தாசில்தார் கந்தப்பன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X