search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    சேலம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

    சேலம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் முனியன். தொழிலாளி. இவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 55). சம்பவத்தன்று இவர் வீட்டை திறந்து வைத்து விட்டு கடைக்கு சென்று உள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகு வந்த பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோவை பார்த்த போது அதில் வைக்கப்பட்டு இருந்த 4 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரிந்தது. இது குறித்து அவர் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×