என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆண்டிபட்டி அருகே கூலித்தொழிலாளி அடித்து கொலை
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகில் உள்ள பாலகோம்பையை சேர்ந்தவர் வெள்ளைத்துரை(40). இவர் தேங்காய் உறிக்கும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி வள்ளி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நேற்று வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடிப்பார்த்துவிட்டு அவரது குடும்பத்தினர் தூங்கச்சென்றுவிட்டனர். இன்று அதிகாலை பாலகோம்பை-ராயவேலூர் சாலையில் சுடுகாடு அருகே வெள்ளைத்துரை தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதைபார்த்த அப்பகுதி பொதுமக்கள் ராஜதானி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி தங்ககிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் உஷா மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டும், தடயவியல் நிபுணர்கள் வந்தும், விசாரணை நடத்தினர். மேலும் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான்பாட்சா, தனராஜா ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசாரும் விசாரணை நடத்தினர்.
அவரது தலையில் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது பெண் பிரச்சினையில் கொலை நடந்ததா என்று பல்வேறு கோணங்களில் ராஜதானி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்