என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழக சட்டமன்ற தேர்தல்- அதிமுகவில் விருப்பமனு விநியோகம் தொடக்கம்
Byமாலை மலர்24 Feb 2021 5:01 AM GMT (Updated: 24 Feb 2021 5:01 AM GMT)
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க.வில் விருப்பமனு விநியோகம் இன்று தொடங்கியது. விருப்பமனு விநியோகத்தை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சென்னை:
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. விருப்ப மனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 5 வரையில் பெறப்படும் என்றும் இந்த மனுக்கள் இன்று முதல் அடுத்த மாதம் 5-ந்தேதிவரை பெறப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டது.. விருப்பமனு விநியோகத்தை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்களை எடப்பாடி பழனிசாமியும், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்களை ஓ.பன்னீர் செல்வமும் வழங்கினர்.
முன்னதாக, அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. விருப்ப மனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 5 வரையில் பெறப்படும் என்றும் இந்த மனுக்கள் இன்று முதல் அடுத்த மாதம் 5-ந்தேதிவரை பெறப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டது.. விருப்பமனு விநியோகத்தை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்களை எடப்பாடி பழனிசாமியும், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்களை ஓ.பன்னீர் செல்வமும் வழங்கினர்.
முன்னதாக, அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X