search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கோவை அருகே வீட்டை திறந்து 12 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணம் திருட்டு

    ஜன்னலில் மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டை திறந்து 12 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணம் திருடு போனது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கணபதி:

    கோவையை அடுத்த மணியகாரம்பாளையம் திருவள்ளுவர் வீதி பகுதியில் வசிப்பவர் பன்னீர் செல்வம். இவரது மகன் வேலப்ப உடையார் (வயது42). இவர் நேற்று தன் மனைவியுடன் குலதெய்வம் கோவிலுக்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சாவியை, வீட்டில் உள்ள ஜன்னல் ஓரத்தில் மறைத்து வைத்து விட்டு புறப்பட்டார். பின்னர் மாலை 4 மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சாவி கதவில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது யாரோ மர்ம ஆசாமி மறைத்து வைத்து இருந்த சாவியை எடுத்து கதவைத் திறந்து வீட்டுக்குள் சென்று பீரோவில் இருந்த 12 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணம் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் கோவை சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வந்து ரேகையை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×