என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவையாறு அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்23 Feb 2021 4:05 PM GMT (Updated: 23 Feb 2021 4:05 PM GMT)
திருவையாறு அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு:
திருவையாறை அடுத்த செம்மங்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் உலகநாதன். இவரது மகன் பிரபுதேவா (வயது25). இவர் டிப்ளமோ படித்துவிட்டு, கோயம்புத்தூரில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் பிரபுதேவா கடந்த 6 ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள பெற்றோரிடம் கூறியுள்ளார். இதற்கு பிரபுதேவாவிடம் உன் தங்கை திருமணம் முடிந்தபிறகு உன் திருமணத்தை பற்றி பேசிக்கொள்ளலாம் என்று பெற்றோர் கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த பிரபுதேவா நேற்றுமுன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை பொன்னாரை சுடுகாடு அருகே மாந்தோப்பில் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உலகநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த உலகநாதன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அங்கு தூக்கில் தொங்கியது பிரபுதேவா என்று அவர் அடையாளம் காட்டினார்.
இதுகுறித்து உலகநாதன் திருவையாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து பிரபுதேவா உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X