search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    சாலையை கடக்க முயன்றவர் கார் மோதி பலி

    பாடாலூர் அருகே சாலையை கடக்க முயன்றவர் கார் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாடாலூர்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா திருமச்சூர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன்(வயது 40). இவருடைய மனைவி, பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள பாடாலூர் பகுதியில் வசித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக நேற்று வரதராஜன் வந்தார். அவர், பாடாலூரில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த கார், அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார். அந்த வழியாக சென்ற ரோந்து போலீசார், அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே வரதராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×