
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக உற்சவர் சந்திரசேகரர் மனோன்மணி தாயாருடன், அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு திருத்தேரில் எழுந்தருளுகிறார். பின்னர் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க, மாடவீதிகளில் தேர் உலா வருகிறது.
தேரோட்டத்துக்கு வசதியாக சாலை சீரமைப்பு, மரக்கிளைகளை வெட்டி அகற்றுதல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. வருகிற 27-ந் தேதி கொடியிறக்கம், 28-ந் தேதி பந்தம் பறிஉற்சவம், 18 திருநடனத்துடன் விழா நிறைவுபெறுகிறது.