என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முசிறியில் ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 17 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு
Byமாலை மலர்22 Feb 2021 4:44 PM GMT (Updated: 22 Feb 2021 4:44 PM GMT)
முசிறியில் பட்டப்பகலில் பின்பக்க கதவை உடைத்து ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 17 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
முசிறி:
ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் கொள்ளை போன சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
முசிறியில் அழகாப்பட்டி சாலையில் பனந்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் வாசுதேவன் (வயது 64). இவர் தொலைத்தொடர்பு அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். நேற்று இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டைபூட்டி விட்டு முசிறியில் உள்ள உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு சென்று விட்டு மதியம் மீண்டும் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் பூட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவுதாழ்பாள் உடைக்கப்பட்டு, கதவுதிறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த சுமார் 17 பவுன் தங்க காசுகள், தங்கநகைகள் மற்றும் 1 லட்சத்து 10 ஆயிரம், வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தன.
இதுகுறித்த புகாரின் பேரில் முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரம்மானந்தம், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் கொள்ளை போன சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
முசிறியில் அழகாப்பட்டி சாலையில் பனந்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் வாசுதேவன் (வயது 64). இவர் தொலைத்தொடர்பு அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். நேற்று இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டைபூட்டி விட்டு முசிறியில் உள்ள உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு சென்று விட்டு மதியம் மீண்டும் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் பூட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவுதாழ்பாள் உடைக்கப்பட்டு, கதவுதிறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த சுமார் 17 பவுன் தங்க காசுகள், தங்கநகைகள் மற்றும் 1 லட்சத்து 10 ஆயிரம், வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தன.
இதுகுறித்த புகாரின் பேரில் முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரம்மானந்தம், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X